திருச்சி -பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை – தீயணைப்பு வீரர்கள் அசத்தல்

 

திருச்சி -பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை – தீயணைப்பு வீரர்கள் அசத்தல்

திருச்சி

திருச்சியில் மழைக் காலங்களில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்வது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும்

திருச்சி -பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை – தீயணைப்பு வீரர்கள் அசத்தல்

தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணிக்கான ஒத்திகை தத்துரூபமாக செய்து காட்டினர். அப்போது, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், தண்ணீரில் மூழ்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது மற்றும் செயற்கை சுவாசம் அளிப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன்,

திருச்சி -பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை – தீயணைப்பு வீரர்கள் அசத்தல்

மழைக்காலங்களில் சாதாரணமாக கிடைக்க கூடிய பிளாஸ்டிக் கேன், கயிறு உள்ளிட்டட பொருட்களை கொண்டு, மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்வது என்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியை வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு பயனடைந்தனர்.