காவலர்களுடன் கராத்தே பயிற்சி செய்த திருச்சி சரக டிஐஜி

 

காவலர்களுடன் கராத்தே பயிற்சி செய்த திருச்சி சரக டிஐஜி

திருச்சியில் காவலர்களுக்கு நடைபெற்ற உடற்பயிற்சி முகாமில் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா கலந்துகொண்டு கராத்தே பயிற்சி செய்து அசத்தினார். திருச்சி சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களுக்கு உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட வாரந்தோறும்

காவலர்களுடன் கராத்தே பயிற்சி செய்த திருச்சி சரக டிஐஜி

சனிக்கிழமைகளில் கராத்தே, உடற்பயிற்சி மற்றும் அணிவகுப்பு உள்ளிட்ட பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என காவல் துறை திருச்சி சராக துணைத்தலைவர் ஆனிவிஜயா உத்தரவிட்டிருந்தார்.

காவலர்களுடன் கராத்தே பயிற்சி செய்த திருச்சி சரக டிஐஜி

அதன்படி இன்று காவலர்களுக்கான பயிற்சி திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில், காவலர்களுக்கு ஊக்கமூட்டும் விதமாக, டி.ஐ.ஜி ஆனி விஜயா கலந்துகொண்டு காவலர்களுடன் சேர்ந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் சக காவலர்கள் உற்சாகத்துடன் பயிற்சி மேற்கொண்டனர்.