திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கொரோனாவால் பலி!

 

திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்  கொரோனாவால் பலி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட5,609 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்  கொரோனாவால் பலி!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,02,985 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்  கொரோனாவால் பலி!

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கொரோனாவால் பலியாகியுள்ளார். திருச்சி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அப்துல்-க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் சிகிக்சை பலனின்றி அப்துல் இன்று உயிரிழந்தார்.