திருச்சி- ”ஆன்லைன் வகுப்பு புரியவில்லை “- கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

 

திருச்சி- ”ஆன்லைன் வகுப்பு புரியவில்லை “- கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் இளங்கோ தெருவில் வசித்து வருபவர் ரமேஷ், இவரின் மகள் லலிதா (19). தனியார் கல்லூரியில் தற்போது இளங்கலை ஆங்கிலம், முதலாம் ஆண்டு சேர்ந்து ஆன்லைன் வகுப்பில் பயின்று வருகிறார்.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று வந்த லலிதாவுக்கு, ஆன்லைன் வழியான ஆங்கில வகுப்பு தனக்கு புரியவில்லை என பெற்றோரிடம் வருத்தப்பட்டு வந்துள்ளார்.

திருச்சி- ”ஆன்லைன் வகுப்பு புரியவில்லை “- கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் வகுப்பு கற்றுத் தரும் ஆசிரியர்களிடம் கூறிய போதும், அவர்கள் இன்னும் சில நாட்களில் புரிந்து விடும் என லலிதாவிடம் கூறி வந்துள்ளனர்.
இதையடுத்து படிப்பில் கவனம் செலுத்த முடியாத விரக்தியில் இருந்த அவர், வீட்டில், அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சேலையால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சி- ”ஆன்லைன் வகுப்பு புரியவில்லை “- கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை


சற்று நேரத்தில் லலிதாவின் தம்பி பார்த்து, அதிர்ச்சியில் சத்தம் போட, அருகிலிருந்தவர்கள் லலிதாவின் உடலை இறக்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து பாலக்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.