திருச்சி- முதல்வரை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்த அதிமுகவினர்

 

திருச்சி- முதல்வரை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்த அதிமுகவினர்

திருச்சி

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனோ தடுப்பு பணிகள் மற்றும் பல்வேறு மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வுசெய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு இன்று வருகிறார். இதனையொட்டி, அவரை வரவேற்க 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் திருச்சி விமான நிலையம் முன்பாக குவிந்தனர்.

திருச்சி- முதல்வரை வரவேற்க விமான நிலையத்தில் குவிந்த அதிமுகவினர்

இதனால் விமான நிலைய சாலை முழுவதும் இருச்சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களாக காட்சி அளித்தது. திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை செல்லும் முதல்வரை வரவேற்க விமான நிலையம் முதல், மாவட்ட எல்லை வரை சாலையின் இருபுறங்களிலும் அதிமுக தொண்டர்கள் வரவேற்க நின்று வருகின்றனர்.