ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை

 

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை

திருச்சி

கைசிக ஏகாதசி தினத்தையொட்டி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை வழங்கப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் சிறப்பை உடையது திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயம். இங்கு கி.பி. 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் இஸ்லாமியர் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் கோவில் சூறையாடப்பட்ட நிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50 ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும் விதமாக ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியன்று திருப்பதி கோயில் தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடைபெறுவது வழக்கம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை


அதன்படி, இன்று கைசிக ஏகாதசியை ஒட்டி, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்கள பொருட்களை கொண்டு வரப்பட்டது. திருப்பதி தேவஸ்தான செயல் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, நிர்வாக அதிகாரி ஜவஹர்ரெட்டி ஆகியோர் தலைமையில் எடுத்துவரப்பட்ட இந்த பொருட்கள், ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், பட்டாச்சார்யர்கள் மற்றும் அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு, திருப்பதி கோயில் சார்பில் வஸ்திர மரியாதை


முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் யானை மீது வைத்து கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள் பிரகாரங்களில் வலம்வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர். பின்னர் இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் அலுவலர்கள், திருப்பதி தேவசம்போர்டு அதிகாரிகள், அறநிலையத் துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.