ஆண்டிபட்டி அருகே பழங்குடியின பெண் விஷம் குடித்து தற்கொலை!

 

ஆண்டிபட்டி அருகே பழங்குடியின பெண் விஷம் குடித்து தற்கொலை!

தேனி

ஆண்டிப்பட்டி அருகே குடும்ப தகராறில் பழங்குடியின பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டம், கடலைக்குண்டு பழங்குடியினர் காலனியை சேர்ந்தவர் தவம். இவருக்கு மகேஸ்வரி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகேஸ்வரிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும், மகேஸ்வரியின் சகோதருக்கும், அதே குடும்பத்தில் பெண் எடுத்திருந்தனர்.

ஆண்டிபட்டி அருகே பழங்குடியின பெண் விஷம் குடித்து தற்கொலை!

இந்த நிலையில், மகேஸ்வரியின் சகோதரருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது வாழ்க்கை பாதிப்படையும் வேதனையில் இருந்து வந்த மகேஸ்வரி கடந்த திங்கள் கிழமை வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில், மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேஸ்வரி உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.