மருத்துவ காப்பீடு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

 

மருத்துவ காப்பீடு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

2019 ஏப்ரல் முதல் ஓய்வு பெற்றவர்கள் பணம் பலன்களை உடனே வழங்க கோரி தஞ்சை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கோட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

மருத்துவ காப்பீடு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியுசி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவ காப்பீடு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பண பலன்களை உடனே வழங்க வேண்டும் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு 2015 நவம்பரிலிருந்து நிலுவையில் உள்ள 58 மாத அகவிலைப்படி உயர்வு தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு ஊதிய ஒப்பந்தத்தின் உயர்வினை ஓய்வூதிய குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் வகையில் மாற்றி அமைத்திட வேண்டும்.

மருத்துவ காப்பீடு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற அனைவருக்கும் , அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் செய்தனர்.