இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில், போக்குவரத்துக் கழக அதிகாரி பலி!

 

இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில், போக்குவரத்துக் கழக அதிகாரி பலி!

திருப்பூர்

பல்லடம் அருகே இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் போக்குவரத்து கழக அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம். இவர் திருப்பூர் அரசு போக்குவரத்து கழகத்தில் தணிக்கையாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில, நேற்று மாலை பணி முடிந்து, பிரகாசம் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது டேங்கர் லாரி மோதியதில், போக்குவரத்துக் கழக அதிகாரி பலி!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெரும்பாளி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது, எதிரே கோவையில் இருந்து பல்லடம் நோக்கி வந்த டேங்கர் லாரி அதிவேகமாக மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்தார். பிரகாசத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.