வாகன சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம்; திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

 

வாகன சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம்; திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

கோடம்பாக்கம் காமராஜர் காலனியில் வசித்து வந்த திருநங்கை சபினா(19) பாலியல் தொழில் செய்து வந்திருக்கிறார். இவர் நேற்று தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் வள்ளுவர் கோட்டம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக சபினாவின் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் சபினாவுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாகன சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம்; திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம்!

அந்த வாக்குவாதத்தின் போது போலீசார் சபினாவின் கையிலிருந்த வளையல்கள் மற்றும் பொருட்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தன் வீட்டுக்குச் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சபினா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். வாகன சோதனையில் ஏற்பட்ட பிரச்னையால் சபினா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.