‘நான் உன்னை காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்கிறேன்!’- திருநங்கையிடம் லட்சங்களை சூருட்டிய சென்னை வாலிபர்

 

‘நான் உன்னை காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்கிறேன்!’- திருநங்கையிடம் லட்சங்களை சூருட்டிய சென்னை வாலிபர்

காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி திருநங்கையிடம் லட்சக்கணக்கில் பணத்தை பறித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

‘நான் உன்னை காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்கிறேன்!’- திருநங்கையிடம் லட்சங்களை சூருட்டிய சென்னை வாலிபர்

சென்னை அமைந்தகரையைச் சேர்ந்தவர் திருநங்கை பிரியங்கா. புழல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது உசேன். இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடையில் காதலாக மாறியுள்ளது. பின்னர் உன்னை திருமணம் செய்து கொள்வதாக திருநங்கை பிரியங்காவிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளார் உசேன். அப்போது, தான் கப்பலில் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய பிரியாங்கா தனது டெபிட் கார்ட், செல்போன் அனைத்தையும் உசேன் பயன்படுத்த அனுமதித்துள்ளார். மேலும், பிரியங்காவின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டரை லட்சத்துக்கும் மேல் பணத்தை எடுத்துள்ளார் உசேன். இதனால் அதிர்ச்சியடைந்த பிரியங்கா, உசேனிடம் கேட்டுள்ளார்.

‘நான் உன்னை காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்கிறேன்!’- திருநங்கையிடம் லட்சங்களை சூருட்டிய சென்னை வாலிபர்

இதனால் உஷாரான உசேன், பிரியங்காவுடனான தொடர்பை துண்டித்ததோடு, செல்போன் நம்பரையும் மாற்றிவிட்டார். இதனால் பணத்தை இழந்த பிரியங்கா அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உசேன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பிரியங்கா. இந்த புகாரின் பேரில் உசேன் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் திருநங்கை யுவஸ்ரீ என்ற முத்துலெட்சுமி கடந்த வாரம் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த புகைப்படங்கள் திருநங்கைகளின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பரவியது. அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திருநங்கை பிரியங்காவுக்கு தன்னை ஏமாற்றிய முகமது உசேன், யுவஸ்ரீயுடன் வாழ்ந்து வந்தது தெரிந்துள்ளது.

 

இதனிடையே, அமைந்தரை காவல்நிலையத்தை திருநங்கைகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், “நாங்கள் புகார் கொடுத்த போதே உசேனை கைது செய்திருந்தால் திருநங்கை யுவஸ்ரீ தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்” என்று ஆவேசப்பட்டனர். பின்னர் திருநங்கைகளிடம் காவல்துறையினர், உசேனை கைது செய்வதாக சமாதான பேச்சுவார்த்தை நடத்திவைத்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து அமைந்தகரை காவல்துறையினர் தூத்துக்குடி விரைந்தனர். அங்கிருந்த முகமது உசேனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், யுவஸ்ரீயை ஆறு மாதத்திற்கு முன்பு உசேன் திருமணம் செய்த வாழ்ந்துள்ளார். யுவஸ்ரீ வீட்டுக் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தைத் திருப்பிக் கட்டுவதில் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த தகராறில் யுவஸ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை செய்யும் முன்பு திருநங்கை யுவஸ்ரீ கொடுத்த மரண வாக்குமூலத்தில் முகமது உசேன் தன்னை அடித்து கொடுமைபடுத்துவதாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

‘நான் உன்னை காதலிக்கிறேன்; கல்யாணம் பண்ணிக்கிறேன்!’- திருநங்கையிடம் லட்சங்களை சூருட்டிய சென்னை வாலிபர்

உசேன் சென்னை ரிச்சி தெருவில் உள்ள மொபைல் கடை ஒன்றில் வேலைப்பார்த்து வந்துள்ளார். அப்போது பல திருநங்கைகளுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் பல திருநங்கைகளை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.