‘காவலரிடம் தங்க செயினை ஆட்டையை போட்ட திருநங்கை’ லிஃப்ட் கொடுத்ததால் வந்த வினை!

 

‘காவலரிடம் தங்க செயினை ஆட்டையை போட்ட திருநங்கை’ லிஃப்ட் கொடுத்ததால் வந்த வினை!

மதுரவாயல் அருகே திருநங்கை ஒருவர், காவலரிடம் தங்க செயினை பறித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.

விருத்தாசலத்தை சேர்ந்த காவலர் சத்தியமூர்த்தி(28), ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். அமைச்சர் பென்ஜமின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், நேற்று முன்தினம் தனது பைக்கில் சென்னை திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

‘காவலரிடம் தங்க செயினை ஆட்டையை போட்ட திருநங்கை’ லிஃப்ட் கொடுத்ததால் வந்த வினை!

மதுரவாயல் டோல்கேட் அருகே இவர் வந்து கொண்டிருந்த போது, அவ்வழியே நின்று கொண்டிருந்த திருநங்கை தன்னை மதுரவாயலில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட காவலர், அவரை மதுரவாயல் மேம்பாலம் கீழே திருநங்கையை இறக்கிவிட்ட பிறகு தனது கழுத்தை பார்த்துள்ளனர். அப்போது, ஒரு சவரன் தங்க செயின் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

‘காவலரிடம் தங்க செயினை ஆட்டையை போட்ட திருநங்கை’ லிஃப்ட் கொடுத்ததால் வந்த வினை!

செயினை பறித்து செல்ல திட்டமிட்ட அந்த திருநங்கை, லிஃப்ட் கேட்பது போல நடித்து லாவகமாக செயினை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அந்த திருநங்கை மீது மதுரவாயல் காவல்நிலையத்தில் சத்தியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.