மீண்டும் அதிமுகவில் இணைகிறார் திருநங்கை அப்ஸரா ரெட்டி

 

மீண்டும் அதிமுகவில் இணைகிறார் திருநங்கை அப்ஸரா ரெட்டி

திருநங்கை அப்ஸரா ரெட்டி அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக செயற்பாட்டாளரும், பத்திரிகையாளருமானவர் திருநங்கை அப்ஸரா ரெட்டி. அரசியலில் ஈடுபாடு கொண்ட இவர், ஜெயலலிதா இருந்த போது அதிமுகவிலும், அதன்பின் டிடிவி தினகரனின் அமமுகவிலும் இருந்து பணியாற்றினார்.

மீண்டும் அதிமுகவில் இணைகிறார் திருநங்கை அப்ஸரா ரெட்டி

பின்னர் அமமுகவிலிருந்து விலகிய இவர் கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த உடனே அவருக்கு அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மீண்டும் அதிமுகவில் இணைகிறார் திருநங்கை அப்ஸரா ரெட்டி

இந்நிலையில் அப்ஸரா ரெட்டி தற்போது காங்கிரசிலிருந்து விலகி அதிமுகவில் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை சென்னை ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தின் போது, ஓபிஎஸ் – ஈபிஎஸ் முன்னிலையில் அவர் அதிமுகவில் இணையவுள்ளாராம்.