நேற்று 46 அதிகாரிகள்; இன்று 26 அதிகாரிகள் : தமிழ்நாடு அரசு அதிரடி!

 

நேற்று 46 அதிகாரிகள்; இன்று 26 அதிகாரிகள் : தமிழ்நாடு அரசு அதிரடி!

தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 26 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

நேற்று 46 அதிகாரிகள்; இன்று 26 அதிகாரிகள் : தமிழ்நாடு அரசு அதிரடி!

இந்நிலையில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக ஆர்.பொன்னி நியமனமிக்கப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் எஸ்.பி.,யாக சாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு எஸ்.பி.,யாக கிங்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பியாக இருந்த சண்முகப்பிரியா சைபர் கிரைம் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநில போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு எஸ்பியாக சுஜித்குமார், மனித உரிமைகள் ஆணையத்தின் எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நேற்று 46 அதிகாரிகள்; இன்று 26 அதிகாரிகள் : தமிழ்நாடு அரசு அதிரடி!

மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சேலம் மண்டல எஸ்.பி.யாக மகேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறை தலைமையக உதவி ஐஜியாக துரை, தீபா சத்யன் சென்னை ரயில்வே காவல்துறை எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று 46 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 26 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.