செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

 

செப்., 30 வரை ரயில்கள் ரத்து இல்லை! ரயில்வே அமைச்சகம் மறுப்பு!

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், மெயில், விரைவு ரயில்கள், பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று வெளியான தகவலை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ரயில்கள் ரத்து நடவடிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வரையிலும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த நடவடிக்கையை தெற்கு ரயில்வே நீட்டித்து அறிவித்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, அதுமாதிரி எந்த ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சிறப்பு மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.