தஞ்சையில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்!

 

தஞ்சையில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி  வகுப்பு தொடக்கம்!

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் வாக்குச்சாடி மையங்களில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, ஆட்சியர் கோவிந்தா ராவ் தலைமையில் இன்று நடந்தது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது.

தஞ்சையில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி  வகுப்பு தொடக்கம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கோவிந்தா ராவ் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த கூட்டத்தில், மண்டல அலுவலர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு சட்டமன்ற தேர்தலின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.