தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!

 

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!

தமிழகத்தில் இயக்கப்படவுள்ள 13 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து பேருந்து சேவை கடந்த 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. செப்.7 ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை மற்றும் பயணிகள் ரயில் சேவைக்கு அனுமதி அளிப்பதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்!

இந்நிலையில் தமிழகத்தில் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை கொண்ட பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை – கோவை இடையே 3 சேவைகளும், சென்னை – திருச்சி மற்றும் கோவை – மயிலாடுதுறை இடையிலும் ரயில்கள் இயக்கம் செய்யப்படுகிறது. மொத்தம் 13 ரயில்கள் இயக்கப்படவுள்ள நிலையில், பயணிகள் பயண நேரத்திற்கு 90 நிமிடங்கள் முன்னதாக ரயில் நிலையம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு பிறகு ரயிலில் மக்கள் பயணிக்க இருக்கின்றனர்.