சென்னை சென்ட்ரலில் இருந்து ரயில் சேவை தொடக்கம்!

 

சென்னை சென்ட்ரலில் இருந்து   ரயில் சேவை தொடக்கம்!

தமிழகத்திற்குள் பயணிகள் ரயில் சேவை ஜூன் மாதத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது.

கொரோனா பேரிடர் காலமாக தமிழகத்தில் பொது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று முதல் ரயில் போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து   ரயில் சேவை தொடக்கம்!

அந்த வகையில் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டு வந்தனர். ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே பயணிகள் ரயில் நிலையத்திற்கு வர ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் குளிர்சாதன பெட்டிகளில் தேவையான அளவிற்கு வெப்பநிலை ஒழுங்குபடுத்தப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை சென்ட்ரலில் இருந்து   ரயில் சேவை தொடக்கம்!

முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 6 ஆம் எண் நுழைவாயில் வழியாக மட்டுமே பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.