“மதுரை – தேனி இடையே ஏப்ரலில் ரயில் சேவை” – எம்.பி., சு.வெங்கடேசன் தகவல்

 

“மதுரை – தேனி இடையே ஏப்ரலில் ரயில் சேவை” – எம்.பி., சு.வெங்கடேசன் தகவல்

தேனி

மதுரை முதல் தேனி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்தால் வரும் ஏப்ரல் மாதத்தில் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக, மதுரை எம்.பியும், ரயில்வே நிலைக்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

“மதுரை – தேனி இடையே ஏப்ரலில் ரயில் சேவை” – எம்.பி., சு.வெங்கடேசன் தகவல்

தேனி ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கடந்த ஆண்டு இறுதியில் மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரை ரயில் சோதனை ஓட்டம் முடிவற்ற நிலையில், வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தேனி வரையிலான சோதனை ஓட்டமும், செப்டம்பர் மாதத்திற்குள் போடி வரையிலான சோதனை ஓட்டம் முடிவடைந்து விடும் என ரயில்வே பொது மேலாளர் தமக்கு உறுதி அளித்து கடிதம் எழுதியுள்ளார் என்றும் கூறினார்.

“மதுரை – தேனி இடையே ஏப்ரலில் ரயில் சேவை” – எம்.பி., சு.வெங்கடேசன் தகவல்

மேலும், தேனி வரை பணிகள் முடிந்து விட்டாலே ஏப்ரல் மாதத்தில் ரயிலை இயக்க எண்ணியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், சென்னையிலிருந்து வரும் ஏதேனும் ஒரு விரைவு ரயிலையும், இந்த திட்டத்தில் இணைத்து போடி அல்லது தேனி வரையிலாவது அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளதாகவும், தேனியில் இருந்து நாகர்கோவில் பயணிகள் ரயில் திட்டமும் இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது தங்களது கோரிக்கையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.