ஜூன் 1 ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடக்கம்!

 

ஜூன் 1 ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடக்கம்!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ரயில்களில் அதிகமாக பயணிகள், பயணிப்பார்கள் என்பதால் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்தே  3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஜூன் 30 ஆம் தேதி வரை அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது.

ஜூன் 1 ஆம் தேதி முதல் ரயில் சேவை தொடக்கம்!

இந்நிலையில் கிட்டத்தட்ட55 நாட்களுக்கு பிறகு ரயில் சேவையை மீண்டும் துவக்க ரயில்வேத் துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஏசி இல்லாத 200 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். வழக்கமான கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களுக்கும் ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.