‘கழுத்தை இறுக்கிய ஊஞ்சல்’ 13 வயது சிறுவன் பரிதாப மரணம்!

 

‘கழுத்தை இறுக்கிய ஊஞ்சல்’ 13 வயது சிறுவன் பரிதாப மரணம்!

சோழவந்தான் அருகே ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இருக்கும் ராயபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதி வேல்முருகன்- செல்வி. இவர்களது மகன் பிரகாஷ். இவர் 8ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று வாடிப்பட்டி அருகே இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு பிரகாஷ் சென்றிருக்கிறார். அங்கு அவரது தாய்மாமனின் 8 மாத குழந்தைக்காக ஊஞ்சல் அமைக்கப்பட்டிருந்துள்ளது.

‘கழுத்தை இறுக்கிய ஊஞ்சல்’ 13 வயது சிறுவன் பரிதாப மரணம்!

அந்த குழந்தை ஊஞ்சலில் அழவே, தாய் குழந்தையை தூக்கிச் சென்றிருக்கிறார். அதனால் அந்த ஊஞ்சலில் அமர்ந்து பிரகாஷ் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவர் ஊஞ்சலில் வேகமாக சுற்றத் தொடங்கியதும், ஊஞ்சல் பிரகாஷின் கழுத்தை இறுக்கியுள்ளது. இதனை வீட்டில் இருந்த யாரும் கவனிக்காத நிலையில், சிறுவன் மயங்கியிருக்கிறார்.

இதனையடுத்து பிரகாஷ் மயங்கிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுவன் பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.