மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை… காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சோகம்!

 

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை… காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சோகம்!

மதுரை

மதுரையில் மனைவி பிரிந்து சென்றதால் தீக்குளித்த இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரை காப்பாற்ற முயன்ற தாயும் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை மேல அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் மனைவி செல்வ ஈஸ்வரி(65). இவரது இளைய மகன் அருண் சக்கரவர்த்தி (28). இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டார். மேலும், வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் வாழ்வில் விரக்தியடைந்து காணப்பட்ட சக்கரவர்த்தி நேற்று முன்தினம் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

மனைவி பிரிந்து சென்றதால் இளைஞர் தீக்குளித்து தற்கொலை… காப்பாற்ற முயன்ற தாயும் பலியான சோகம்!

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தாயார் செல்வ ஈஸ்வரி அவரை காப்பற்ற முயன்றார். அப்போது, ஆடையில் தீப்பற்றியில் அவரும் பலத்த தீக்காயம் அடைந்தார். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சக்கரவர்த்தி மற்றும் தாயார் செல்வ ஈஸ்வரில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரை தெப்பக்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தீக்குளித்த மகனை காப்பாற்ற முயன்ற தாயும் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.