நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டாம்.. சாலை விதிமீறல் அபராதங்களை இனிமேல் ஆன்லைனில் செலுத்தலாம்!

 

நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டாம்.. சாலை விதிமீறல் அபராதங்களை இனிமேல் ஆன்லைனில் செலுத்தலாம்!

தமிழகத்தில் சாலை விதிமீறலுக்கு குறையே கிடையாது. தினந்தோறும் நூற்றுக் கணக்கான விபத்துகள் இந்த சாலை விதிமீறல்கள் மூலமாக நடப்பதால் அபராதங்கள் கடுமையாக்கப்பட்டன. குறிப்பாக ஹெல்மெட் அணியாமலும், சிக்னல்களை மீறியும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது என எல்லாவற்றுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. அவ்வாறு விதிக்கப்படும் அபராதங்களை வாகன ஓட்டிகள் போலீசாரிடமோ அல்லது மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலோ நேரில் சென்று செலுத்தலாம் என்ற நடைமுறை அமலில் இருக்கிறது.

நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டாம்.. சாலை விதிமீறல் அபராதங்களை இனிமேல் ஆன்லைனில் செலுத்தலாம்!

இந்நிலையில் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலமாக அந்த அபராதத்தை செலுத்த, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி, டி.எஸ்.சிவஞானம் தலைமையில் கணினி குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது சாலை விதிமீறலில் ஈடுபடுவோரின் வாகன எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு வாகன ஓட்டியின் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பப்படுமாம். அதன் பிறகு, அந்த இணையதள முகவரியில் அபராதம் செலுத்த வேண்டுமாம்.

இந்த திட்டத்தை இன்று உச்ச நீதிமன்ற இ-கமிட்டி தலைவராக உள்ள நீதிபதி சந்திரசூட் வீடியோ கான்பரன்ஸில் தொடக்கி வைத்தார். ஏற்கனவே டெல்லியில் இது போன்ற விர்ச்சுவல் எனப்படும் மெய்நிகர் நீதிமன்றங்களை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் விர்ச்சுவல் நீதிமன்றம் தொடங்குவது இதுவே முதல்முறை ஆகும்.