போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி ட்ராபிக் ராமசாமி மனுதாக்கல்!

 

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி ட்ராபிக் ராமசாமி மனுதாக்கல்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அதிமுக உறுப்பினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகிய ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் உறவினர்களாக ஜெ.தீபா, தீபக் ஆகியோர் சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர். அவரின் சொத்துக்களை நிர்வகிக்க தங்களுக்கு அனுமதி அளிக்க கோரினர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றிக்கொள்ளவும், அதை முதல்வரின் அலுவலகமாக மாற்றவும்  உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது.

போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி ட்ராபிக் ராமசாமி மனுதாக்கல்!

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட காலகட்டத்தில் போயஸ் தோட்ட இல்லத்தின் ஒரு பகுதி வாங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்றும், அந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்றுவது என்பது நீதிமன்ற அவமதிப்பு செயல் என்றும் மனுவில் ராமசாமி குறிப்பிட்டுள்ளார். மேலும் வீட்டை சோதனையிட்ட வருமான வரித் துறையினர், அதில் ஒரு பகுதியை சீல் வைத்துள்ளனர் என்பதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை வருமான வரித் துறையினர் எந்த இறுதி உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற முடியாது என மனுதாரரான ட்ராபிக் ராமசாமி, தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.