சென்னையில் 15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு

 

சென்னையில் 15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்பு மெட்ரோ நிறுவனம் சார்பில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. அதனால் அந்த தடத்தில் வரும் வாகனங்கள் அனைத்தையும் வேறு வழியில் மாற்ற வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் வரும் 25 ஆம் தேதி வரை சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் 15 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு

 

இது குறித்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில், முத்துசாமி சாலை வழியாக வருபவர்கள் வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணாசாலை செல்லலாம் என்றும் வால்டாக்ஸ் சாலை வழியாக வருபவர்கள் ஈவிஆர் சாலை, முத்துசாமி பாலம் வழியாக அண்ணாசாலை செல்லலாம் என்றும் ஈவினிங் பஜார் சாலையில் இருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ,மேலும், முத்துசாமி சாலையில் இருந்து ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக பல்லவன் சாலை செல்ல இயலாது என்றும் தெரிவித்துள்ளது.