டிராக்டர் திருட்டு – போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

 

டிராக்டர் திருட்டு – போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

திருச்சி

சிறுகனூர் அருகே டிராக்டர் திருட்டு வழக்கில் தேடப்பட்ட இளைஞர் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகேயுள்ள வாழையூரை சேர்ந்தவர் செந்தில்(38). மரம் வெட்டும் தொழிலாளி. இவர் சில நாட்களுக்கு முன்பு லால்குடி பூவாளுர் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த டிராக்டரை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், திருடுபோன டிராக்டர் செந்தில்குமாரின் வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அவரது வீட்டிற்கு சென்று உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், அவர் வெளியே சென்றிருந்ததால், விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் கூறிவிட்டு சென்றனர்.

டிராக்டர் திருட்டு – போலீஸ் விசாரணைக்கு பயந்து தொழிலாளி தற்கொலை

தான் டிராக்டர் திருடியது வெளியே தெரிந்ததால் அவமானமடைந்த செந்தில், விசாரணைக்கு ஆஜரானால் போலீசார் தன்னை கைதுசெய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் இருந்தார். இதனால் நேற்று, அங்கிருந்த பருத்திக்காட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.