டிராக்டர்-இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

 

டிராக்டர்-இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

தஞ்சாவூர்

திருவையாறு அருகே கரும்பு பாரம் ஏற்றிச்சென்ற டிராக்டரில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டிராக்டர்-இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு மேலவட்டத்தை சேர்ந்த ஜெகநாதன் மனைவி சக்குபாய்(70). இவரது மகன் பிரகாஷின் மகன்கள் அகிலேஷ்(12) மற்றும் பரணீஸ்(10). நேற்று மதியம் இவர்கள் மூவரும், திருவையாறு அடுத்த கீழபுனவாசல் தமிழர் தெருவை சேர்ந்த உறவினர் மணிகண்டன்(32) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் தஞ்சைக்கு சென்றனர். அரசூர் அருகே சென்றபோது, டிராக்டர் ஒன்று தஞ்சை குருங்குளம் சர்க்கரை ஆலைக்கு, 2 டிரெயலர்களை கோர்த்தப்படி சென்று கொண்டிருந்தது. திடீரென சாலையின் குறுக்கே சென்ற கேபிள் ஒயர் டிராக்டரில் சிக்கி அறுந்து கீழே விழுந்ததில், பின்னால் வந்த மணிகண்டன், சக்குபாய் உள்ளிட்டோர் மீது சிக்கியது. இதனால் 4 பேரும் வாகனத்துடன் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர். அப்போது, டிராக்டர் டிரெயலரில் சிக்கி மணிகண்டன், சக்குபாய், அகிலேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பரணீஸ் காயத்துடன் உயிர் தப்பினான்.

டிராக்டர்-இருசக்கர வாகனம் மோதி விபத்து- ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த திருவையாறு டி.எஸ்.பி., சித்திரவேலு தலைமையிலான நடுக்காவேரி போலீசார், 3 பேரின் உடல்களையும் மீட்டு, திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கும், பரணீசை சிகிச்சைக்காகவும் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடி டிராக்டர் ஓட்டுநரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.