‘மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை’ மத்திய அமைச்சருக்கு டி.ஆர் பாலு கடிதம்!

 

‘மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை’ மத்திய அமைச்சருக்கு டி.ஆர் பாலு கடிதம்!

கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுக் கொடுக்குமாறு டி.ஆர் பாலு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று கச்சத்தீவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, பலூன் விரைவு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை விரட்டியடித்துள்ளனர். அத்திமட்டுமில்லாமல் மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தால் கரை திரும்பிய மீனவர்கள், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

‘மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை’ மத்திய அமைச்சருக்கு டி.ஆர் பாலு கடிதம்!

இந்த நிலையில், கச்சத்தீவில் மீன்பிடிக்கும் உரிமையை தமிழக மீனவர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை கடற்படையினரால் பல லட்ச மதிப்பிலான பொருட்களை இழந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.