இனி நீலகிரி குடியிருப்பு பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது – ஹைகோர்ட் அதிரடி!

 

இனி நீலகிரி குடியிருப்பு பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது – ஹைகோர்ட் அதிரடி!

நீலகிரி மாவட்டத்தில் 110 சட்டவிரோத கட்டுமானங்கள் வரன்முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இனி நீலகிரி குடியிருப்பு பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது – ஹைகோர்ட் அதிரடி!

நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளால் தான் சுற்றுசூழல் மாசு ஏற்படுத்துவதாக தெரிவித்த நீதிபதிகள், சட்டவிரோத ரிசார்ட்கள் நீலகிரியில் அதிகளவில் உள்ளதாகவும்,சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நச்சு புகை பரவுவதாகவும், இயற்கையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். குடியிருப்பு கட்டடங்களில் சுற்றுலா பயணிகள் தங்க அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், குடியிருப்பு பகுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஆய்வுசெய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளார்கள்.

இனி நீலகிரி குடியிருப்பு பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது – ஹைகோர்ட் அதிரடி!

குடியிருப்புகள் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என தெரிவித்த அவர்கள், விடுமுறை காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகும் என்பதால் போதுமான கட்டுப்பாடுகள் அமல்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.