“பணம் தர்றேன்னு கூப்பிட்டு பிணமாக்கிட்டியே” -கணவனால் மனைவிக்கு நேர்ந்த நிலை

 

“பணம் தர்றேன்னு கூப்பிட்டு பிணமாக்கிட்டியே” -கணவனால் மனைவிக்கு நேர்ந்த நிலை

வரதட்சணை தகராறில் பிரிந்து போன மனைவியை அவரின்  கணவர் கொலை செய்து வீசிய சம்பவத்தால் அவரை போலீசார் கைது செய்தார்கள் .

“பணம் தர்றேன்னு கூப்பிட்டு பிணமாக்கிட்டியே” -கணவனால் மனைவிக்கு நேர்ந்த நிலை

கான்பூரின்  ஹமீர்பூரைச் சேர்ந்த காஞ்சன் என்ற பெண்ணை நசிர்பூர் கிராமத்தைச் சேர்ந்த அமிட் லால் என்பவர் மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து  கொண்டார் .இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு மகனிருக்கிறார் .இந்நிலையில் கடந்த மூன்றான்டுகளுக்கு முன்பு திருமணமானதிலிருந்து அவர்கள்  இருவருக்கும் வரதட்சணை தகராறு இருந்து வந்துள்ளது .இதனால்  இருவருக்கும்  அடிக்கடி சண்டை வந்துள்ளது. அதன் காரணமாக  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் காஞ்சன்  அவரின்  கணவன் லாலை  விட்டு ஜனவரி மாதம் பிரிந்து சென்று விட்டார் .கணவரிடமிருந்து பிரிந்த  அந்த பெண் தன்னுடைய தாயார் வீட்டில் வசித்து வந்தார் .

அதனால் மனைவியை பிறந்த லால் மிகவும் மன  வேதனைப்பட்டார் .அதன் பிறகு அவரின் வீட்டிற்கு சென்று மனைவியையும் குழந்தையையும் குடும்பம் நடத்த கூப்பிட்டார் .ஆனால் வரதட்சணை  தகராறு காரணமாக  அவரின் பெற்றோர் அவரை அனுப்ப மறுத்து விட்டார்கள்

இதற்கிடைய  லால் கடந்த பிப்ரவரி 2ம் தேதியன்று தன்னுடைய மனைவியை பணம் கொடுப்பதாக  கூறி அவரை வயல் வெளிக்கு அழைத்து சென்றார் .அதன் பிறகு  அங்கு அவரோடு உறவுகொண்டார் .அதன் பிறகு  அவர் துப்பட்டாவால்  அவரின் மனைவியின்  கழுத்தை  நெரித்து கொலை செய்தார் .பின்னர் அங்கிருந்து அவர் தப்பியோடி விட்டார் .

மகளை காணாத  கஞ்சனின் பெற்றோர் போலீசில் புகாரளித்தார்கள் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து காஞ்சனின் பிணத்தை கைப்பற்றினார்கள் .பிறகு விசாரணை நடத்தி  அவரின் கணவர் லாலை  கொலை வழக்கில் கைது செய்தார்கள் .

“பணம் தர்றேன்னு கூப்பிட்டு பிணமாக்கிட்டியே” -கணவனால் மனைவிக்கு நேர்ந்த நிலை