லாக்டவுன் காலத்தில் தொகுதி மக்களுக்கு உதவிய டாப் 10 எம்.பி.க்கள் பட்டியல்.. ராகுல் காந்திக்கு 3வது இடம்

 

லாக்டவுன் காலத்தில் தொகுதி மக்களுக்கு உதவிய டாப் 10 எம்.பி.க்கள் பட்டியல்.. ராகுல் காந்திக்கு 3வது இடம்

லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்த டாப் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்) பட்டியலில் ராகுல் காந்தி 3வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அதிகபட்சமாக பா.ஜ.க. எம்.பி.க்கள் 4 பேர் இடம் பெற்றுள்ளனர்

டெல்லியை சேர்ந்த கவர்ன்ஐ என்ற இணையதளம் கோவிட்-19 லாக்டவுன் காலத்தில், தனது தொகுதி மக்களுக்கு அதிகம் உதவி செய்த எம்.பி.க்கள் யார் என்பது குறித்து ஒரு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அக்டோபர் 1 முதல் 15ம் தேதி வரை நாட்டின் பல தொகுதிகளில் அங்குள்ள மக்களிடம் இது தொடர்பாக கவர்ன்ஐ குழு சர்வே மேற்கொண்டது. இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அதிகம் உதவி செய்த டாப் 10 எம்.பி.க்கள் பட்டியலில் யாரும் எதிர்ப்பார்க்காத பல எம்.பி.க்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் வடசென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் இந்த பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார்.

லாக்டவுன் காலத்தில் தொகுதி மக்களுக்கு உதவிய டாப் 10 எம்.பி.க்கள் பட்டியல்.. ராகுல் காந்திக்கு 3வது இடம்
அனில் பிரோஜியோ

மக்களுக்கு உதவிய டாப் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல்
1.அனில் பிரோஜியோ (பா.ஜ.க.)
2.அதலா பிரபாகர ரெட்டி (ஓய்.எஸ்.ஆர்.சி.)
3.ராகுல் காந்தி (காங்கிரஸ்)
4.மஹூவா மொய்த்ரா (திரிணாமுல் காங்கிரஸ்)
5.எல்.எஸ்.தேஜஸ்வி சூர்யா (பா.ஜ.க.)

லாக்டவுன் காலத்தில் தொகுதி மக்களுக்கு உதவிய டாப் 10 எம்.பி.க்கள் பட்டியல்.. ராகுல் காந்திக்கு 3வது இடம்
தமிழச்சி தங்கபாண்டியன்

6.ஹேமந்த் துக்காராம் கோட்சே (சிவ சேனா)
7.சுக்பீர் சிங் பாதல் (சிரோன்மணி அகாலி தளம்)
8.சங்கர் லால்வாணி (பா.ஜ.க.)
9.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க.)
10.நிதின் ஜெய்ராம் கட்கரி (பா.ஜ.க.)