கொரோனா தடுப்பு தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

 

கொரோனா தடுப்பு தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

தமிழகத்தில் கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவிவருகிறது. குறிப்பாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் 300 க்கும் மேற்பட்டோ கொரோனா தொற்றால் தினமும் உயிரிழந்துவருகின்றனர். கொரோனா பரவலை தடுக்கவும், படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையை போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது.

கொரோனா தடுப்பு தொடர்பாக நாளை அனைத்துக்கட்சி கூட்டம்

இந்நிலையில் கொரோனா தடுப்பு தொடர்பாக நாளை சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக்கட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து
சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கவுள்ளார், சென்னை தலைமை செயலகத்தில் மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.