மீண்டும் ஏறுமுகத்தில் தங்க விலை.. ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது!

 

மீண்டும் ஏறுமுகத்தில் தங்க விலை.. ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது!

ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாறி மாறி ஏற்ற இறக்கத்தை சந்தித்த தங்க விலை, கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது வரலாறு காணாத ஏற்றத்தை கண்டது. சுமார் ரூ.43 ஆயிரம் வரை உயர்ந்த தங்க விலை 50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக தங்க விலை குறைந்து வந்து மீண்டும் 40 ஆயிரத்தில் நீடிக்கிறது. தங்க விலை மட்டுமில்லாது வெள்ளி விலையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்க விலை அதிகரித்துள்ளது.

மீண்டும் ஏறுமுகத்தில் தங்க விலை.. ரூ.41 ஆயிரத்தை நெருங்குகிறது!

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,111க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,888க்கு விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.