43 தொகுதிகளில் மொத்தம் 306 வேட்பாளர்கள்.. மேற்கு வங்கத்தில் இன்று 6வது கட்ட தேர்தல்..

 

43 தொகுதிகளில் மொத்தம் 306 வேட்பாளர்கள்.. மேற்கு வங்கத்தில் இன்று 6வது கட்ட தேர்தல்..

மேற்கு வங்கத்தில் இன்று 6வது கட்டமாக மொத்தம் 43 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை கடந்த மார்ச் 27 (30 தொகுதிகள்), ஏப்ரல் 1 (30 தொகுதிகள்), ஏப்ரல் 6 (31 தொகுதிகள்), ஏப்ரல் 10 (44 தொகுதிகள்) மற்றும் ஏப்ரல் 17 (45 தொகுதிகள்) என 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

43 தொகுதிகளில் மொத்தம் 306 வேட்பாளர்கள்.. மேற்கு வங்கத்தில் இன்று 6வது கட்ட தேர்தல்..
தேர்தல் ஆணையம்

இன்று (ஏப்ரல் 22) 6வது கட்டமாக 43 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் மொத்தம் 10,897 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் தேர்தலில் மொத்தம் 1.03 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 53.21 லட்சம் பேரும், பெண் வாக்காளர்கள் 50.65 லட்சம் பேரும், மூன்றாம் பாலினத்தவர் 256 பேரும் அடங்குவர்.

43 தொகுதிகளில் மொத்தம் 306 வேட்பாளர்கள்.. மேற்கு வங்கத்தில் இன்று 6வது கட்ட தேர்தல்..
முகுல் ராய்

5வது கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6.30 மணி வரை நடைபெற உள்ளது. தேர்தலில் வெளிப்படத்தன்மை உயர்த்தும் நோக்கில் அனைத்து வாக்குச்சாவடிகளில் வாக்கு விவிபாட் பயன்படுத்த உள்ளது. இந்த தேர்தல் பா.ஜ.க.வின் முகுல் ராய், ராகுல் சின்ஹா, திரிணாமுல் காங்கிரசின் ஸ்வபன் டெப்நாத், சந்திரிமா பட்டாச்சார்யா உள்பட மொத்தம் 306 வேட்பாளர்கள் இந்த 6வது கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர். தேர்தலை அமைதியாகவும் நியாயமாகவும் நடத்துவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.