தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா… 4 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!

 

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா… 4 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுத்துவருகிறது. இதனால் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்துவருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ளன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 630 பேர் ஒரே நாளில் உயிரிழந்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உச்சம் தொட்ட கொரோனா… 4 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு!

இச்சூழலில் தமிழ்நாட்டில் தற்போதைய கொரோனா நிலவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 3,986 பேர் கொரோனா வைரஸால் 9,11,110 பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 11 ஆயிரத்து 110ஆக அதிகரித்துள்ளது. இன்று 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,821ஆக அதிகரித்துள்ளது. இன்று 1,824 பேர் குணமடைந்ததன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 70ஆயிரத்து 546ஆக அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது