மதவாத, அடிமை சக்திகளை முறியடிப்போம் : மு.க. ஸ்டாலின் உறுதி!!

 

மதவாத, அடிமை சக்திகளை முறியடிப்போம் : மு.க. ஸ்டாலின் உறுதி!!

பேராசிரியர் அன்பழகன் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

மதவாத, அடிமை சக்திகளை முறியடிப்போம் : மு.க. ஸ்டாலின் உறுதி!!

மூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமாக இருந்தவர் க.அன்பழகன். இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி தனது 98ஆவது வயதில் உயிரிழந்தார். இந்நிலையில் பேராசிரியர் அன்பழகன் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது.இதனால் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்குக் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அன்பழகன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “தந்தை பெரியாரின் மாணவர்-பேரறிஞரின் அன்புத் தம்பி-தலைவர் கலைஞரின் கொள்கைத் தோழர்-இயக்கத்தின் கருத்தியல் தலைவர் இனமான பேராசிரியர் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று! மதவாத-அடிமை சக்திகளை முறியடித்து, சுயமரியாதைமிக்க-சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு உறுதியேற்போம்” என்று பதிவிட்டுள்ளார்