தொழில்வரி, தொழில் உரிமம் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

 

தொழில்வரி, தொழில் உரிமம் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

சென்னையில் தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கான தொகையை செப்டம்பர். 30 ஆம் தேதிக்குள் அபராதமின்றி செலுத்தலாம். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு அவகாசம் வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் துறையின் முக்கிய வருவாய் இனங்களான சொத்துவரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் உட்பட வரி வருவாய் இனங்கள், வரி வருவாய் அல்லாத இனங்கள் / கட்டணங்கள் சென்ற நிதி (2019-20) ஆண்டின் 31.03.2020க்குள் சொத்து உரிமையாளர்கள்/நிறுவனதாரர்களால் சட்ட விதிகளின்படி செலுத்தப்பட வேண்டும்.

தொழில்வரி, தொழில் உரிமம் புதுப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி வரிவருவாய் இனங்களை வசூலிக்க இயலாத சூழ்நிலையில், செலுத்த வேண்டிய வரிவருவாய் இனங்களை (தொழில்வரி, தொழில் உரிமம் உட்பட), எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் செலுத்த ஏதுவாக காலக்கெடு 30.06.2020 வரை ஒத்திவைக்க அரசால் ஆணையிடப்பட்டது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி (தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு) எவ்வித அபராதம் மற்றும் தண்டத்தொகையின்றி 30.09.2020 க்குள் செலுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.