“ஒரு வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க” : பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

 

“ஒரு வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க” :  பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் ஒருவார காலத்திற்கு தேவையான பொருட்களை இருப்பு வைத்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தாலும், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் ஏரிகள் பல முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

“ஒரு வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க” :  பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு மத்தியில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம், பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள்! தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இடி மின்னல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. குடைகளை உபயோகப்படுத்தக் கூடாது. மரத்தின் அடியில் நிற்க கூடாது, திறந்தவெளியில் இருக்கக் கூடாது நீர்நிலைகளில் குளிக்க கூடாது.

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

“ஒரு வாரத்திற்கான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க” :  பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை!

அத்துடன் மெழுகுவர்த்திகள் , தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியபொருட்கள் , எரிவாயு , மண்ணெண்ணெய் , மருந்து , பேட்டரிகள் , டார்ச்கள் , முகக்கவசங்கள் போன்றவற்றை இருப்பு வைத்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.