அரசு வேலையில் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஜாக்பாட்… முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

 

அரசு வேலையில் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஜாக்பாட்… முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தேர்வாணையத்தால் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதியன்று நடத்தப்பட்ட குரூப்-1இல் அடங்கிய பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வெழுதிய விண்ணப்பதாரர்களுள் தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தனது இணையவழி விண்ணப்பத்தில் கோரியுள்ள விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு.

அரசு வேலையில் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஜாக்பாட்… முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

அவர்கள் கீழ்க்காணும் கல்வித் தகுதிகளைத் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று வெளியிடப்படவுள்ள உரிய படிவத்தில், ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 16ஆம் தேதி வரை (வேலை நாட்களில்) ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அரசு வேலையில் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஜாக்பாட்… முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

1.பள்ளி முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை

2.மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப்படிப்பு

3.பட்டப்படிப்பு

அரசு வேலையில் தமிழ்வழி கல்வி பயின்றோருக்கு ஜாக்பாட்… முக்கிய அறிவிப்பு வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி!

இதுகுறித்த தகவல் உரிய விண்ணப்பதாரர்களுக்கு அதாவது விண்ணப்பத்தில் தமிழ் வழியில் கல்விப் பயின்றதாகக் குறிப்பிட்டு முதல்நிலைத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்படும். இதைத் தவிர தேர்வாணைய இணையதளம் மூலமாகவும் இதுகுறித்த குறிப்பாணையினை ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேற்குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில் அவர்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.