டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது; முதன்மை தேர்வுக்கான தேதியும் அறிவிப்பு!

 

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது; முதன்மை தேர்வுக்கான தேதியும் அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு கடந்தாண்டு ஏப் 5ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு ஜனவரி 3ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 66 பணியிடங்களுக்காக இத்தேர்வு நடைபெற்றது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியானது; முதன்மை தேர்வுக்கான தேதியும் அறிவிப்பு!

இச்சூழலில் முதல்நிலை தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. ஒரு பணியிடத்திற்கு 50 பேர் வீதம் முதல்நிலை தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.