நம்பிக்கையோடு இருங்கள்… கொரோனா முடிந்த பிறகு தேர்வு! – டி.என்.பி.எஸ்.சி செயலர் அறிவிப்பு

 

நம்பிக்கையோடு இருங்கள்… கொரோனா முடிந்த பிறகு தேர்வு! – டி.என்.பி.எஸ்.சி செயலர் அறிவிப்பு

தற்போதைய சூழலில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்த முடியாது, ஆனால் தேர்வுகள் கட்டாயம் நடக்கும், எனவே போட்டியாளர்கள் நம்பிக்கை இழக்காமல் தேர்வுக்குத் தயாராகும் படி டி.என்.பி.எஸ்.சி செயலர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையோடு இருங்கள்… கொரோனா முடிந்த பிறகு தேர்வு! – டி.என்.பி.எஸ்.சி செயலர் அறிவிப்புதமிழக அரசுப் பணிகளுக்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் மூலம் தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டு குரூப் 1 தேர்வு ஏப்ரல் மாதமும், குரூப் 2 தேர்வு ஜூலை மாதமும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடத்த முடியவில்லை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாலும் எப்போது நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடவில்லை.

நம்பிக்கையோடு இருங்கள்… கொரோனா முடிந்த பிறகு தேர்வு! – டி.என்.பி.எஸ்.சி செயலர் அறிவிப்புஇந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மருத்துவ முகாமை தொடங்கிவைக்க அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். அவருடன் டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமாரும் வந்திருந்தார். அவரிடம் தேர்வுகள் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “தேர்வுகள் நடைபெறுமா, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுமா என்ற சந்தேகம் வேண்டாம். தற்போதைய சூழலில் தேர்வு நடத்த வாய்ப்பில்லை. கொரோனா பிரச்னை தீர்ந்தவுடன் குரூப்1, குரூப் 2 தேர்வுகள் நிச்சயம் நடைபெறும். இரண்டு தேர்வுக்கும் மூன்று மாத கால இடைவெளி இருக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும். மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வுக்குத் தயாராக வேண்டும்” என்றார்.