“மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை” – வெளியானது புதிய தகவல்!

 

“மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை” – வெளியானது புதிய தகவல்!

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், நெல்லையை சேர்ந்த அப்துல் வஹாப் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கொரோனா தடுப்பூசியை 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு செலுத்துவது தொடர்பாக இதுவரை தெளிவான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. தடுப்பூசிகள் செலுத்தப்படாமல் மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வது கொரோனா நோய்தொற்று பரவலை அதிகரிக்க செய்ய வாய்ப்புள்ளது.

“மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை” – வெளியானது புதிய தகவல்!

சுழற்சி முறையில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றால் ஒரே வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கற்றலில் வேறுபாடுகள் எழ வாய்ப்புள்ளது. ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமையாகவும் அமையும். அனைத்து மாணவர்களும் நேரடியாக பள்ளிக்கு வரவேண்டும் என வற்புறுத்தாமல் ஆன்லைன் வழியாக வகுப்புகளைக் கவனிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பையும் வழங்க வேண்டும்.

“மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயமில்லை” – வெளியானது புதிய தகவல்!

ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் வகுப்புகளை கவனிக்க அனுமதிக்கும் வகையில் வழிகாட்டல்களை வழங்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழ்நாட்டில் நாளை பள்ளிகள் திறந்தாலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர வேண்டும் என கட்டாயம் இல்லை என்று கூறியுள்ளார்.