அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!

 

அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னையில் தான் அதிக அளவு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. இதனால் தலைநகரான சென்னையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இருப்பினும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

அமலுக்கு வந்தது பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!

சென்னையில் பொது முடக்கம் காரணமாக சுமார் 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ள இந்த அரசின் இந்த முடிவுக்கு மக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு ஒத்துழைப்பு தருமாறு காவல்துறையினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாகனங்களில் சென்று பொருட்களை வாங்காமல் இரண்டு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திலேயே நடந்து சென்று பொருட்களை வாங்கி வருமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பொதுமுடக்கத்தை கண்காணிக்க சென்னை நகரில் 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேவையின்றி வாகனங்களில் பயணம் செய்வோரின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். முக்கியமாக காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் எந்த வாகனமும் செல்ல கூடாது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனால் அந்த சாலைகள் மூடப்பட்டுள்ளது. முக்கியமாக திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது என்றும் அதை புதிதாக புதுப்பிக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். சென்னை மற்றும் அதன் உட்பகுதியில் உள்ள இடங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்கும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.