ஊரடங்கு நீட்டிப்பு… மேலும் சில தளர்வுகளை அளித்தது தமிழக அரசு!

 

ஊரடங்கு நீட்டிப்பு… மேலும் சில தளர்வுகளை அளித்தது தமிழக அரசு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், கூடுதல் தளர்வுகளை அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இ-சேவை மையம், தேநீர் கடைகள், இனிப்பு மற்றும் கார வகை கடைகள், கட்டுமான அலுவலகங்கள் இயங்க அனுமதி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு… மேலும் சில தளர்வுகளை அளித்தது தமிழக அரசு!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

கொரோனோ பெருந்தொற்றை கட்டுபடுத்த 31.5.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் கூடாது என்ற நோக்கத்தில் நோய் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை சற்று விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளன.

ஊரடங்கு நீட்டிப்பு… மேலும் சில தளர்வுகளை அளித்தது தமிழக அரசு!

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு மேற்படி 11 மாவட்டங்களை தவிர்த்து இதர 27 மாவட்டங்களில் 14.6.2021 முதல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில் தேநீர் வாங்க வரும் போது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்லுமாறும் நெகிழிப் பைகளில் தேநீர் வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதை போல இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 மணி முதல் 2 மணிவரை இயங்கலாம். இங்கும் பார்சல் விற்பனை முறை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு… மேலும் சில தளர்வுகளை அளித்தது தமிழக அரசு!

பொதுமக்களின் நலன் கருதி அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற இ-சேவை மையங்கள் 14.6.2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. கட்டுமான பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும் வாங்கும் கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.