கோவில்களை திறக்க அனுமதியா? அரசின் புது உத்தரவு
Apr 18, 2021, 19:15 IST1618753521000
தமிழகத்தில் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்குவரவுள்ளன.
அதன்படி,
கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மதம் சார்ந்த திருவிழாக்கள், கூட்டங்களை தள்ளி வைக்க வேண்டும்.
முன்னேற்பாடுகள் செய்துள்ள குடமுழுக்கு விழாக்களுக்கு 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதி
கல்லூரி/ பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீட்டிலிருந்த படியே இணையவழி வகுப்புகளை எடுக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்படும்.
கோடைக்கால முகாம்கள் நடத்த அனுமதி இல்லை.
ஞாயிறு அன்று காய்கறி, இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளுக்கும் தடை
ஞாயிறு அன்று திரையரங்கம், வணிக வளாகங்கள் செயல்படவும் அனுமதி இல்லை
முழு ஊரடங்கு நாளில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி
ஞாயிறு அன்றும் திருமண நிகழ்ச்சியில் 100 பேர் வரை பங்கேற்கலாம்