ஜனநாயக கடமையை ஆற்றிய, மாவட்ட ஆட்சியர்கள்!

 

ஜனநாயக கடமையை ஆற்றிய, மாவட்ட ஆட்சியர்கள்!

தமிழக சட்டமன்ற தேர்லையொட்டி, பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் காலையிலேயே வாக்குச் சவாடிகளுக்கு சென்று, தங்களது வாக்குகளை செலுத்தினர்.

திருப்பூரில் உள்ள பிஷப் உபகரசாமி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன், அங்கு தனது வாக்கை பதிவு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு ஊராட்சி அங்கன்வாடியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு சென்ற ஆட்சியர் கண்ணன், அங்கு பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

ஜனநாயக கடமையை ஆற்றிய, மாவட்ட ஆட்சியர்கள்!

தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு சென்ற ஆட்சியர் செந்தில்ராஜ், அங்கு தனது வாக்கை செலுத்தினார். இதே மையத்தில், மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமாரும் வாக்கை பதிவுசெய்தார்.

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அடுத்துள்ள எர்ரஅள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில், மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கார்த்திகா வாக்களித்தார்.

ஜனநாயக கடமையை ஆற்றிய, மாவட்ட ஆட்சியர்கள்!

இதேபோல், விழுப்புரத்தில் உள்ள செயிண்ட் பால்ஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வந்த, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அங்கு பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்கை செலுத்தினார்.