சென்னையில் 31,896 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

 

சென்னையில் 31,896 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,974 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,661ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் 31,896 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

சென்னையில் 31,896 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 176பேருக்கும் திண்டுக்கல்லில் 218 பேருக்கும் திருநெல்வேலியில் 464பேருக்கும், ஈரோட்டில் 73, திருச்சியில் 163பேருக்கும், நாமக்கல் 92 மற்றும் ராணிப்பேட்டை 193, செங்கல்பட்டு 2,882, மதுரை 426, கரூர் 94, தேனி 146, மற்றும் திருவள்ளூரில் 1,865 பேருக்கு, தூத்துக்குடியில் 398, விழுப்புரத்தில் 437 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 39பேருக்கும், தருமபுரியில் 27 பேருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 31,896 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்

இதேபோல் திருப்பூரில் 116, கடலூர் 533, மற்றும் சேலத்தில் 229, திருவாரூரில் 128, நாகப்பட்டினம் 113, திருப்பத்தூர் 47, கன்னியாகுமரியில் 122 மற்றும் காஞ்சிபுரத்தில் 709 பேருக்கும், சிவகங்கை 90மற்றும் வேலூரில் 152பேருக்கும், நீலகிரியில் 14பேருக்கும், தென்காசி 134, கள்ளக்குறிச்சியில் 344 பேருக்கும், ராமநாதபுரத்தில் 158பேருக்கும், அரியலூர் 392 மற்றும் பெரம்பலூரில் 146பேருக்கும், புதுக்கோட்டையில் 51 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 594‬பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.