தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி! மொத்த பாதிப்பு 34,914 ஆக உயர்வு!!

 

தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி! மொத்த பாதிப்பு 34,914 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 72லட்சத்து 31ஆயிரமாக அதிகரித்துள்ளது. 4லட்சத்து 9ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 33,229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி! மொத்த பாதிப்பு 34,914 ஆக உயர்வு!!

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 1,685பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 13, 219 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,21,171ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 1,091 பேர் ஆண்கள், 594பேர் பெண்கள். 77 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. இன்று மட்டும் 21பேர் உயிரிழந்தனர். 6 பேர் தனியார் மருத்துவமனையிலும், 15பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 307 ஆக அதிகரித்துள்ளது. இன்று 798பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 18,325ஆக அதிகரித்துள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.