தமிழகத்தில் ஒரே நாளில் 7,817 பேருக்கு கொரோனா உறுதி, 182 பேர் பலி

 

தமிழகத்தில் ஒரே நாளில் 7,817 பேருக்கு கொரோனா உறுதி, 182 பேர் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 99லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 3லட்சத்து 87ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் ஒரே நாளில் 7,817 பேருக்கு கொரோனா உறுதி, 182 பேர் பலி

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 7,817பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4,305பேர் ஆண்கள், 3,512பேர் பெண்கள். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24லட்சத்து 22ஆயிரத்து 497ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 372 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் 272 பரிசோதனை மையங்கள் உள்ளன.

இன்று 182பேர் உயிரிழந்துள்ளார். 76 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 106பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 31ம்197ஆக அதிகரித்துள்ளது. இன்று 17,043பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,21,928ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.