தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 13,191 ஆக உயர்வு

 

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 13,191 ஆக உயர்வு

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 25ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை 12,448 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! மொத்த பாதிப்பு 13,191 ஆக உயர்வு

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 743பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,191ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 442பேர் ஆண்கள், 301பேர் பெண்களாவர். தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 987-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,882ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் கோவிட்-19 க்கான ரத்த பரிசோதனை இன்று மட்டும் 11,894பேருக்கு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 63ஆய்வகங்கள் உள்ளன. 3,43,793பேரிடம் இது வரை சோதனை செய்யப்பட்டுள்ளது ” என தெரிவிக்கப்பட்டுள்ளது.